"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்."
விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான்."
என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய், பெருமையாய் பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய் தற்கொலை செய்து கொள்கிறான். இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின் ஏதோ ஒரு மூலையிலோ நடந்த செய்தி அல்ல. உலகுக்கே படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. "
என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.
அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல் வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு முழக் கயிறுடன் நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.
வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம், வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.
அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால் நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள் அதுக்கு மேல் !!!! விவசாயி எங்கு போய் முட்டிக்கொள்வது??? மண்பரிசோதனை செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....
மீண்டும் புலம்புவான் விவசாயி .......
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. "
என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.
அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல் வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு முழக் கயிறுடன் நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.
வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம், வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.
- நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத் தன்மையும் இல்லை.
- நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.
- போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும் நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.
- குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .
அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால் நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள் அதுக்கு மேல் !!!! விவசாயி எங்கு போய் முட்டிக்கொள்வது??? மண்பரிசோதனை செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....
மீண்டும் புலம்புவான் விவசாயி .......
விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!