அகமும் புறமும்
இதமாய் நனைத்து
குழந்தையாய்
உள்ளம் குதூகலிக்க
வைத்து
மறந்திருந்த பால்யம்
உசுப்பி
தற்கால கவலை
மரணித்து
இயல்பாய் உயிரினில்
ஒரு சிலிர்ப்பை
தந்தது அந்த
மாலை நேரத்து
மழை .
அந்த அற்புத
கணங்கள்
மண் நனைத்து
வாசனை கிளப்பி
என்னை ஏகாந்தத்தில்
திளைக்க விடலாம்.
இல்லை
நெஞ்சில் சூல் கொண்டு
கவிதையாய் பிரசவிக்கலாம்.
எப்போது வேண்டுமானாலும் !!!
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!