Saturday, February 4, 2012

மச்சான் உனக்கு எத்தனை?



எங்க கல்லூரி நாட்கள்ல செமஸ்டர் ரிசல்ட் வந்த ஒரு  வாரத்துக்கு  இந்த வாசகம் ரொம்பவும் பிரசித்தி பெற்றது. பொதுவா இதுக்கு அர்த்தம் உனக்கு எத்தனை அரியர் இருக்குன்னு ஆனா எங்கள பார்த்து இத கேட்டா நாம எத்தன பேப்பர் பாஸ் பண்ணி இருக்கோம்னு அர்த்தம் அந்த அளவுக்கு சரஸ்வதி தேவியோட  கருணை  இருந்துச்சு ..

கல்லூரியோட தரத்த உயர்த்த நிர்வாகம் ரொம்ப முயற்சி  பண்ணாங்க, அதுல ஒண்ணுதான்  மாடல் எக்ஸாம் வைக்கிறது. எக்ஸாம் வச்சா மட்டும் போதுமா அத எழுத ஆள் வேண்டாமா ? ஒரு பய எக்ஸாம் எழுத வர்றது இல்ல . நீங்க ஒன்னும் எழுதி கிழிக்க வேண்டாம் நீங்க வந்தா மட்டும் போதும் அப்படிங்கற அளவுக்கு நிர்வாகம் வந்துருச்சி .. அதுனால நம்மளோட பங்களிப்ப செய்வோம்னு நம்மளும் லேட்டா  போயிட்டு  சீக்கிரம் வந்திடுறது ....இத பார்த்த ஒரு ப்ரொபசர் இனிமே லேட்டா வந்த உள்ள விட மாட்டேன்னு சொல்ல நாங்களும் வழக்கம் போல தலைய ஆட்டிட்டு உள்ள வந்தாச்சு ..கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் என் நண்பன் ஒருவன்.   ப்ரொபசர் அவன்கிட்ட வந்து ஏன் ஒன்னும் எழுதாம இருக்கேன்னு கேட்க, அவன் ரொம்ப அமைதியா தவறுதலா நாளைக்கு  உள்ள எக்சாமுக்கு மாத்தி படிச்சிட்டேன்னு  சொல்ல ப்ரொபசர் கடுப்பாகி ஒன்னும் சொல்ல முடியாம போயிட்டாரு ...
    
அடுத்த நாள் வழக்கம் போல நாங்க லேட்டா வர,  ப்ரொபசர் ரொம்ப உணாச்சி வசப்பட்டு உங்கள உள்ளே விடமுடியதுன்னு சொல்ல, நாங்களும் சரி சார்   கிளம்புறோம் ஒருவேள போற வழியில பிரின்சிபால் பார்த்துட்டு  ஏதாவது கேட்டா,  நீங்க உள்ள விடலன்னு சொல்றோம்னு சொல்ல  அவரு ரொம்ப கடுப்பாகி ஒரு அஞ்சு நிமிஷம் கத்திட்டு உள்ள அனுமதிச்சாரு..ஏன்னா அவருக்கும் ப்ரின்சிபாலுக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு ...

உள்ள வந்த நாங்களும் கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல சும்மா உட்காந்து இருந்தோம்.என் நண்பனும் சும்மா இருக்கிறத பார்த்த  ப்ரொபசர் வேகமா என் நண்பகிட்ட போயி , நீதான் நேத்தே இந்த பேப்பருக்கு படிச்சுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் ஒன்னும் எழுதாம உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க அவன் ரொம்ப கூலா, "படிச்சது எல்லாம் மறந்து போச்சு சார்" அப்படின்னு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க ப்ரொபசர் நொந்தே போய்ட்டாரு. அப்புறம் என்ன எங்க வீட்டுல பண்ணினத அவரும் பண்ணிட்டு விட்டுட்டாரு . அதாங்க தண்ணி தெளிச்சு   விட்டுட்டாரு.               

செமஸ்டர் எல்லாம் ஒன் டே<காலையில ஒன்னு ,மதியம் ஒன்னு >     , டெஸ்ட் மேட்ச் <தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு எக்சாம்>   ரேஞ்சுக்கு எழுதுறது.  இதே ரேஞ்சுக்கு எழுதுன  செமெஸ்டருக்கு  ரிசல்ட் வந்துச்சு ...எனக்கு ஒரு சென்டிமென்ட் என்னன்னா நம்மளோட ரிசல்ட்ட நாம மொதல்ல பார்க்கிறது இல்ல, நண்பர்கள் எல்லாம் பார்த்துட்டு சொன்னதுக்கு அப்புறமா மனச கொஞ்சம் திடப்படுத்திக்கிட்டு பார்க்கிறது . சில சமயம் அதிர்ச்சியா  ஆல் கிளியர் பண்றதும் உண்டு. அப்படி ரிசல்ட் வந்த நேரம்  நண்பர்கள் எல்லாரும் ரிசல்ட் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க, நான் போய், மச்சான் உனக்கு எத்தனை  ?  மாப்ள உனக்கு எத்தனை? அப்படின்னு கேட்டுட்டு இருந்தேன், அதுல ஒருத்தன் மட்டும் ரொம்ப சோகமா இருந்தான், என்ன ஆச்சுடா மச்சான்னு நான் கேட்க, கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொன்னான்,


"கொய்யால மூணாவது முறையா பர்ஸ்ட் இயர்  வாஷ்  அவுட்டுடா மாப்ள " .

 வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் .     






   

2 comments:

  1. அரியர்ஸ் இல்லா மனிதன் அரை மனிதன்,

    செமஸ்டர்ல யாரு, எத்தன அரியர்ஸ் வைக்கிறாங்கங்குறது முக்கியமில்ல,
    அத யாரு முதல்ல கிளியர் பண்ணுறாங்கங்குறது தான் முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க.. அதையும் சரியா பண்ணலயே..

      Delete