Monday, July 16, 2012

வெட்கப்பூக்கள் !!!

           

நமக்கே  நமக்கென வாய்த்த
தருணங்கள்  என்னால்  நழுவும்போதோ
என் அத்தியந்தமான  காதலை உனக்கு
உணர்த்துவதற்கான நொடிகளை தவறவிடும்போதோ
அன்யோன்யமான  நமது  காதல்
குலாவல்களை தொடரவியலாத போதோ
கோபம் கொண்டு பேச மறுப்பாய்  நீ .
தேவதையிடம் யாசிக்கும் பக்தனை போல
என்  சமரசம் தொடங்கும் அலைபேசி வழியாய்
நான் பேசும் சொற்களையே திரும்ப பேசி
ஊடலாடுவாய் நீ
வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத உன்
பேரழகை வரைமுறை தாண்டி
வர்ணிக்கையில் " ச்சீய்  போடா"  போன்ற
வெட்கப்பூக்களை  சிதறிவிட்டு   அணைத்துவிடுகிறாய்
அங்கு அலைபேசியையும், இங்கு என்னையும் !!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!

5 comments:

  1. கவுஜ எழுதலாம். தப்பில்ல.....

    ஆனா, தொடர் வாக்கியத்துக்கு ஆச்சர்யக்குறி???

    வேணாம் மோனே.....

    திருந்து......

    #நான் இப்புடித்தேன் கமெண்டுவேன்... அப்புறம் புதுசா ஒரு பீசு நம்ம பாலோ பண்ணுதே.... யாருன்னு பாத்தேன்.... ஆங்...

    :-)

    ReplyDelete
  2. @வெளங்காதவன் திருத்திகிட்டேன் பாஸ். வருகைக்கும், சிறிதாய் குட்டியமைக்கும் நன்றி.
    இப்படியே கமெண்டுங்க ப்ரச்சினை இல்ல.
    ஃபாலோ பண்ணினது ஒரு தப்பா? சூதானமா இருடா கைப்புள்ள!!!.

    ReplyDelete
    Replies
    1. யோவ் எங்க போனாலும் உனக்கு இதே வேலையாய்யா?

      Delete
  3. //அலைபேசியையும், இங்கு என்னையும் !!!!//

    பாசு ஓவரா லவ்வு பண்ணுனா உடம்புக்கும் ஆகாது, பர்சுக்கும் ஆகாது, அனுபவம் பாசு அனுபவம் :-) இதுக்கு மேல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்லை சும்மாதான் கவிதை எழுதுனேன்னு மட்டும் சொன்னீங்க வெளங்காதவன்கிட்ட சொல்லி எக்ஸ்ட்ரா ரெண்டு கமெண்டு போட சொல்லுவேன் பரவால்லயா?

    ReplyDelete
    Replies
    1. அனுபவசாலி சொல்றீங்க கேட்டுக்கிறேன்!!! ஆனா கடைசியா சொன்னத மட்டும் செஞ்சிராதீங்க, எப்போ எங்க எழுதினாலு ம்(. , !) எல்லாம் பார்த்து பார்த்து எழுத வேண்டிருக்கு!!!!!!!!!!! அவ்வ்வ்வ்வ்வ்......

      Delete