விநாயகர் சதுர்த்தி அதுவுமா பேஸ்புக்குல நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு கொழுக்கட்டை போஸ்ட்டுல "நச்" கமெண்டுகளா போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த நம்மளுக்கும் கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர, "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன் டி.வி எபெக்டோட, விநாயகர் சதுர்த்தியை இலைகொழுக்கட்டையோட கொண்டாட முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி நேரமா அம்மாகிட்ட விலாவரியா போன்ல கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம் சொல்லிட்டு, சாயந்திரம் வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு? நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல". பூசர இலைக்காக துபாய் பூரா தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை வாங்கியாச்சு.
அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு, பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும் மனசு விடாம தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற கொஞ்சம் கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை ச்சே.. அந்த பூர்ணத்தை நல்லா கிண்ட ஆரம்பிச்சேன்.
இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும் போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு. இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு (உண்மையிலே நல்லா தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு . ஆரம்பம் முதல் நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா மச்சான்,
என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.
வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!
nalla iyalba irukku machchan
ReplyDeletenandri machan...
Deleteரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.
ReplyDeleteyes... this's correct. good idea also to all ..
we can name it after it is cooked according to its taste and shape..
ஆமாமா இப்பலெல்லாம் அப்படி தான் செய்யுறது... வருகைக்கு நன்றி நண்பரே.
Delete