Monday, June 30, 2014

சலாலா போகலாம் வாரீகளா - 2

சலாலா போகலாம் வாரீகளா -1

நம்ம கம்பெனி கிட்டத்தட்ட ஒரு மன்னாரன் கம்பெனி மாதிரி, இஞ்சினியர்  விசா கிடைக்கலைன்னா கொஞ்சம் கூட கூச்சப் படாம லேபர் விசாவை  அடிச்சு தந்திடுவாங்க.  அதுல என்ன பிரச்சனைன்னா பேமிலி விசா எடுக்க தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். அது மாதிரி போற பத்து பேருல ரெண்டு  பேருக்கு லேபர் விசா.  அல் அய்ன் பார்டர் கேட்டுல விசாரிச்சதுல  லேபர் விசா என்ட்ரி இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாங்க  உடனே புத்திசாலித்தனமா,  இஞ்சினியர்  விசா இருக்கிற பாஸ்போர்ட்ட முதல்லயும், லேபர் விசா இருக்கிற நண்பர்களோட பாஸ்போர்ட்ட கடைசியாவும்  வச்சி நீட்ட,  நம்ம நேரம் மொத்தமா எல்லா பாஸ்போர்ட்டையும் வாங்கின அந்த ஆபிசர்  அதை நேரா வைக்காம அப்புடியே குப்புற கவுத்தி வைக்க, எனக்கோ  அது எங்களையே கவுத்த மாதிரி ஆயிடுச்சு.

அந்த ஸ்ட்ரிக்ட் ஆப்பிசர் கிட்ட  எவ்வளவோ கெஞ்சி கேட்டும், கால்ல விழுந்து கதறி கேட்டும் வன்மையா மறுத்துட்டாறு அந்த லேபர் விசா உள்ள நண்பர்களுக்கு விசா தர,

நினைச்ச மாதிரியே எட்டு பேருக்கு விசா கிடைச்சிருச்சி அந்த இருவரைத் தவிர்த்து, கொஞ்சம் எதிர்பார்த்து இருந்ததால அவங்களும் பெருசா ஒன்னும் பீல் பண்ணல. ஆனா ஒருத்தன்  மட்டும் வேகமா வெளியில வந்து இன்னொரு நண்பனை கோபமா திட்ட அவனும் ரொம்ப அமைதியா இருந்தான். விஷயம் என்னன்னா விசா வாங்க உள்ள போகும் போதுதான் இவன்  சொல்லி இருக்கான் ஒரு வண்டியில 5 பேரு போறது கொஞ்சம் கஷ்டம் 4 பேருன்னா  நல்ல தாராளமா  போகலாம்ன்னு !!!! "நல்ல வாய் "

அப்புறம் அந்த 8 பேரும்  பயணத்தை தொடர்ந்தோம்.  நீ இனிமே திங்கிறத தவிர வேற  எதுக்கும் வாய தொறக்க கூடாதுங்குற கண்டிஷனோட !!!

 ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னுட்டு ஒமானுக்குள்ள நுழைஞ்சா ஆச்சர்யம்!!!  நல்ல தென்றல் காத்தும் மிதமான வெயிலுமா ரொம்ப இதமா  இருந்துச்சு  அந்த மக்களைப்போலவே. நானும் கேள்விப்பட்டதுண்டு அந்த நாட்டு  குடிமகன்களுக்கு நிறைய உதவும் மனப்பான்மை உண்டுன்னு, அதை  உணர்ந்து  கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. எதுக்காகவேனும்  வழியில்  வண்டியை நிறுத்தி நின்றாலும்,   நம்மை கடந்து செல்லும் வாகனம் சற்று வேகம் குறைந்து நாம் பிரச்சினை ஏதும்  இல்லையென சைகை செய்தவுடன்  தான் கடந்தார்கள்.

எட்டு மணிக்கு ஒரு பெட்ரோல் பம்ப்பில் வண்டியை நிறுத்தி டேங்க் பில் பண்ணிட்டு, அங்க இருந்தவன்கிட்ட  ஏதாவது  டிபன் பார்சல் வாங்க ஹோட்டல் இருக்கான்னு  கேட்டது தான் தாமதம், கிரகம் எங்களைப் பிடிக்க ஆரம்பித்தது ,
                                                                                                               இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

3 comments:

  1. உங்ககிட்ட இருந்து இன்னும், அதிகமா எதிர் பார்க்குறோம். தெய்வ மகள் சீரியல் மாதிரி சட்டுன்னு முடிச்சிட்டு நாளைக்கு பார்க்கலாமுன்னு போய்டீங்களே?

    ReplyDelete
    Replies
    1. விடுங்க யாஸிர். அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி செஞ்சிருவோம்... வருகைக்கு நன்றி ..

      Delete