Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, December 1, 2013

குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது!!!

சாயந்திர  டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு  டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.

அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை  சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,

எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?

துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ? 

அப்புடின்னு  அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு  நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,


              

டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி  டங் சிலிப் ஆகி   நம்மள  தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா  தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு  சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா 

ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம் 
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.

இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல  நின்னு கும்புட்டுக்கிட்டே   சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.  

கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??

இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான் 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு  தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, July 4, 2013

420 ஏர்டிக்கெட்டும், அடிபொலி அக்கௌன்டன்ட்டும்!!

என்னோட நண்பன் ஒரு மன்னாரன்   கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தான்  (பின்னே நம்மளோட  ப்ரண்டு மலேசியா கம்பெனிலையா   வேல பார்ப்பான்) அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனி அது. எப்படின்னா,

வெக்கேஷன்ல ஊருக்கு போயிருக்கவனுக்கெல்லாம் சம்பளம் போட்டு இருப்பானுங்க. இங்க வேல பார்க்குறவனுக்கு சம்பளம் போட்டு இருக்க மாட்டாங்க  கேட்டா , 

ஓ, நீ  நாட்டிலேருந்து திறுச்சி வந்தோ ?? எப்போ ? 
அப்படின்னு கேட்டு நம்மளை கொலைகாரன் ஆக்கப் பார்ப்பாங்க. 

நாமளும், திருச்சியும் வரல்ல, திண்டிவனமும் வரல்ல நான்தான் துபாய் வந்தேன்னு  சொல்லி கதறி  நம்மளோட சம்பளத்தை கேட்டா, 

இன்னும் டைம் ஷீட் வந்திட்டில்லை பாய் அப்படிப்பாங்க!!!!

"டேய் நாங்க வேலை பார்க்குறோமோ  இல்லையோ டைம் ஷீட்டை   சரியா அனுப்பிடுவோமேடான்னு" சொல்லிட்டு
கொஞ்சம் ட்ரேஸ் பண்ணினா, அந்த பேப்பரை கீழ விரிச்சி சாப்பாடு சாப்பிட்டு இருப்பான் அந்த புண்ணியவான்.
மொத்தத்துல  சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.

இப்படியெல்லாம் நன்கு  அனுபவப்பட்ட  நம்மாளு, ஒருமுறை ஊருக்கு போக   ஒருவாரம் மட்டுமே  அனுமதி கிடைக்க, சொன்ன தேதிக்கு திரும்பி வர்ற  ப்ரூப்புக்கு டூ வே  டிக்கெட்டையும் குடுக்கச் சொல்லிட்டாரு அவனோட டேமேஜர் ,  

லீவை எக்ஸ்டென்ட் பண்ற ஐடியால இருந்த நம்மாளு  ஒன் வே டிக்கெட்டை    டூ வே டிக்கெட்டா  வோர்டுல மாத்தி அவனோட டேமேஜர்கிட்ட கையெழுத்தை  வாங்கி   அக்கவுன்ட்ஸ்  க்ளைமுக்கு  அனுப்பிச்சுட்டான்.

எங்கே குட்டு வெளியாயிருமோன்னு கொஞ்சம் டென்ஷன்ல நம்மாளு  இருக்கும் போது,  அடுத்த நாள் சைட்ல அவனோட நண்பன் ஒருத்தன் வந்து அக்கவுன்ட்ஸ்லேருந்து போன்  பண்ணாங்க, உனக்கு  சிக்னல் கிடைக்கலயாம் (பேஸ்மென்ட் ல  சிலநேரம் சிக்னல் கிடைக்காது )  ஏர் டிக்கெட் சம்மந்தமா ஏதோ பேசணுமாம்  உன்னைய உடனே போன்  பண்ண சொன்னாங்கன்னு சொல்ல,  

அவ்வளவுதான்.தெறிச்சிட்டான் நம்மாளு.ரொம்ப கலவரத்தோட அக்கவுண்டண்டுக்கு  போன் பண்ண, 

அவரோ, சாரே  நிண்ட ஏர் டிக்கெட்டுல வல்லிய தட்டாயி (உன்னோட ஏர்  டிக்கெட்ல பெரிய தப்பு நடந்து போச்சி )  , ரிடர்ன் டிக்கெட்டுல  அதே பிளைட்  நம்பர் ,துபாய் டு திருச்சின்னு இருக்கு அப்படின்னாரே  பார்க்கலாம். நண்பனும்  மிக சாமர்த்தியமாக பாருங்க சார் எவ்வளோ பொறுப்பில்லாம ட்ராவல் ஏஜென்சி இப்படி  தப்பு பண்ணிட்டான்  சொல்லி  எஸ்கேப் ஆயிட்டான்.

நடந்தது இதுதான், வேர்டுல காப்பி  பேஸ்ட் பண்ண நம்மாளு திரும்பி வர்ற பிளைட்  நம்பர், ஊரை  எடிட் பண்ண மறந்துட்டான் . ஆனாலும் அந்த அடிபொலி அக்கௌவுண்டன்ட்  இப்பவும் எங்களுக்கு ஊறுகாய் தான்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!! 

















Wednesday, January 30, 2013

கேம்லின் பேனாவும், வெள்ளை சட்டையும்.






“கேம்லின் பேனா” இந்த பேனாவுக்கு பள்ளி பருவத்தில் எனக்கு இருந்த ஆசை அளவில்லாதது. நண்பர்களில் பெரும்பாலானோர் “ஹீரோ” பேனா மீது நாட்டம் செலுத்த எனக்கோ முழு ஆசையும் இதன் மீதுதான்.

அப்பாவுடன் வெளியில் செல்லுகையில்  என்ன வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம் நான் கேட்பது இந்த பேனாதான். சில சமயம் பேனாவும், சில சமயம் திட்டும் கிடைக்கும்.பேனா வாங்கும் ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசி, இதில்தான் பப்ளிக் எக்ஸாம் எழுத வேண்டும் என்ற தீர்மானங்கள் எல்லாம் அடுத்த மாடல் பேனாவை பார்க்கும் வரையே!!

புது பேனா வாங்கி இங்க் ஊற்றியவுடன் எதாவது சாமி பேரை எழுதி பார்த்துவிட்டு திருப்தியாய் சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுடன் அடிக்கடி அதை தொட்டுப் பார்த்துக் கொண்டு பள்ளிக்கு செல்வது. பள்ளியில் நண்பர்கள்  அதை வாங்கி எழுதி பார்த்து விட்டு சில சமயங்களில் “முள்ளு கீறுது” என்பார்கள், உடனே அதை மென்மையாக்க டிபன் பாக்ஸின் பின்புறம் வைத்து சர சரவென்று கிறுக்கி அதை சரிப்படுத்துவது. சமயங்களில் இங்க் சரியாக வராத போது ப்ளேடால் அந்த முள்ளில் சிறிதாக கீறி அதை சரியாக்குவது. அப்படியும் சரிவராத பேனாக்களின் நிஃப்பை ப்ளேடால் அழுத்தமாக கோடு போட்டு அதிக இங்க் வர வைப்பது இப்படியாக சில நாட்கள் செல்லும் எங்கள் ஆராய்ச்சி.

அது போல எனது ஒரு புது பேனாவை நண்பனொருவன் நன்றாக கீறி ஆப்பரேஷன் செய்யும் பொழுது, என்னுடைய தலைமை ஆசிரியர் என்னை அழைத்து பேங்குக்கு போயிருந்த இன்னொரு வாத்தியாரிடம் ஒரு செக்கை குடுத்துவிட்டு வருமாறு கூற நானும் வாங்கி அதை சட்டைப் பையில் வைத்து கொண்டு ஆப்பரேஷனில் இருந்த அந்த பேனாவையும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு (புதுப் பேனாவாச்சே!!!)

சைக்கிளில் வெகு வேகமாக பேங்குக்கு போயி அந்த வாத்தியாரிடம் தர செக்கை எடுத்தால் இண்டியன் பேங்க் செக் “இங்க் செக்” ஆகி விட்டது.. இதில் நமது வேர்வைத் துளிகள் வேறு… என் வெள்ளை சட்டை பாதி  ஊதா சட்டையாகி விட்டது. பள்ளிக்கு வந்தவுடன் தீபாவளி கொண்டாடி விட்டார் நம்ம தலைமை ஆசிரியர்.அப்புறம் தான் தெரிந்தது அது அவர்களின் சம்பள செக் என்று.

அழாக் குறையாக வகுப்புக்கு வந்த சற்று நேரத்தில் அந்த ஆப்பரேஷன் நண்பன் கேட்டான் “என்னடா இப்போ இங்க் நல்லா வருதான்னு?” கடுப்புடன் நான் சொன்னேன் ம்..ம்.. அடிவாங்கி குடுக்குற அளவுக்கு வருதுன்னு ..

இப்பொழுது பார்க்கர், க்ராஸ் என்று எத்தனையோ விதவிதமான விலை உயர்ந்த பேனா கொண்டு எழுதினாலும், அந்த கேம்லின் பேனா கொண்டு எழுதிய போது இருந்த மகிழ்ச்சியோ ஆர்வமோ இப்போது இல்லை. பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் தான். அது துக்கமோ, சந்தோஷமோ, வலி தந்தவை அனுபவமாகவும், உவப்பானவை மென்மையாய் மயிலிறகைப் போலவும் மனதை வருடிப் போகின்றன இதமாக.

வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!


Monday, November 5, 2012

அத்தாச்சி போட்ட சூடு !!!

                                                   பொங்கல் நேரத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, வீட்டை சுத்தம் பண்ணுவது என்று எங்களை  சத்தெடுப்பார்கள். வீட்டினுள்  இருக்கும் அனைத்து பொருட்களும் கொல்லைப்புறம் வந்துவிடும். அனைத்தும் கழுவியும்,துடைத்தும் திருப்பி வீட்டிற்குள்  வைக்கப்படும். வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில்  தண்ணீர் அடிக்கணும்  பாருங்க, அப்பப்பா  கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே ஒரு ஏழெட்டு  குடம் அடிக்க வைச்சுடுவாங்க.



எல்லாம் முடிஞ்சு சரிதான் இனி விளையாட போகலாம்னு நினைக்கும் போது, நம்மளோட பளிங்கு, சோடாமூடி போன்ற பொக்கிஷம்  எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும். அலசிவிட்ட ஈரம் காயுற வரைக்கும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. ஒரே சத்திய சோதனைதான் போங்க ...

நான் தவழும் பிள்ளையா இருக்கும் போது நடந்தது கீழே  ,
அத்தை  பசங்கள் எல்லாம் ஒன்னாதான் படிச்சோம்.சின்னபசங்க   யாராவது   அழும் போதோ அல்லது சுட்டித்தனம் செய்யும் போதெல்லாம் பேசாம இருக்கியா இல்ல ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா என்று  எங்கம்மா அதட்டுவதும், அந்த குழந்தைகள் அமைதியாவதும் வாடிக்கையாய் இருந்திருக்கிறது.

 ஒரு பொங்கல் சமயத்தில்  எனதருமை அம்மா வீடு அலசிக்கொண்டு இருக்க , வெளியில் தொட்டிலில் இருக்கும் என்னை பார்த்து கொள்ளமாறு  சின்னபிள்ளையான எனது அத்தாச்சியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொட்டிலில் இருந்து நான் சிணுங்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்வது போல பேசாம இருக்கியா இல்ல  ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா? என்று எனது அம்மா பாணியில் அதட்ட,
நான் தொடர்ந்து அழவும்,வெளியில் உலை கொதித்து கொண்டிருந்த விறகு அடுப்பில் ஊதாங்குழலை காய வைத்து கையில் ஒரு இழுப்பு இழுத்து விட , நான் வீறிட்டு அழவும் எனது அம்மா  ஓடி வந்து பார்க்க, எனது அத்தாச்சியோ ஊதாங்குழலும் கையுமாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அது என்னன்னா,   
                             *
                             *
                             *
                             *
                             *
                             * 
ஏன்  அத்தை  நான் சூடு போட்டும் இவன் இன்னும் அழுகையை நிறுத்தலை ???
அப்புறமென்ன அவங்களை ஸர்ஃப், நிர்மா, எல்லாம் போட்டு வெளு வெளுன்னு   வெளுத்துட்டங்களாம் .
எப்போதாவது  அத்தாச்சியிடம்  ரொம்ப கிண்டலடித்து பேசும் போது,      தலையாட்டிக்கொண்டே சொல்வார்கள் உனக்கு சூடு போட்டது    தப்பில்லை,     ஆனா அந்த சூட்டை உன் வாயில போட்டிருக்கணும்!!!. 

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

Monday, October 29, 2012

சிதறிய ரொட்டியும், தெறித்த ரெட்டியும் !!!

                                          ஓட்டுனர் உரிமம்  வாங்குவது என்பது வளைகுடா நாட்டு  வாழ்க்கையில் ஒரு மைல்கல்.பயிற்சி பள்ளியில் சில பூர்வாங்க  தேர்வுக்கு பின் நாம் சில தனியார்  காரோட்டிகளின் மூலம் பயிற்சி பெற்று பின் தேர்வுக்கு செல்லலாம்.
அப்படி தெரியாத்தனமா வந்து நம்ம நண்பர்கள்கிட்ட மாட்டுன ஒரு அப்பாவி ஆத்மா தான் "ரெட்டி " ஆந்திராகாரர். மதிய உணவு இடைவேளையின் போதோ அல்லது சாயந்திரம் எங்களுக்கு  வேலை முடிந்தபின்பு  பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை ஆரம்பமாகும் அவருக்கு.

 ஒரு நண்பன் நான் பெரிய அப்பாடக்கர், ஊரில் எல்லாம் வண்டி ஒட்டி இருக்கேன் சொல்லிட்டு அவரிடம் பயிற்சிக்கு போனான். ஒருமுறை  ரவுண்டானாவில் யு டேர்ன்  எடுக்குமாறு சொல்ல, நமது நண்பனும் எதுக்கு  அங்க எல்லாம் போய்  சுத்திகிட்டின்னு நினைச்சு ரவுண்டானா ஆரம்பமாகும் இடத்திலேயே போட்டான்  பாருங்க யு டேர்ன, அவ்வளவுதான் தெறிச்சுட்டார் நம்ம ரெட்டி.  அப்புறம் அவனுக்கு ஆனா ஆவன்னாலேருந்து ஆரம்பிச்சார். 

பொதுவாக ரவுண்டானா ஆரம்பத்தில் சற்று நிதானித்து வேறு வண்டிக்கு இடைஞ்சல் இல்லாமல் போக வேண்டும்.  ஒருநாள் ரவுண்டானா ஆரம்பத்தில் நிதானித்து வண்டியை மெதுவாக்கி , நம்மாள்  போகலாம் என்று நினைத்து வண்டியை கிளப்பும் போதே  ரெட்டி "பெட்ரோல் தேதோ" " பெட்ரோல் தேதோ" ன்னு அவசர கதியில் கத்த, ஹிந்தி தெரியாத நண்பன், போகச் சொல்கிறாரா, நிக்க சொல்றாரான்னு புரியாமல்  குழம்பி மிகச்சரியாக  நடுரோட்டில் நிறுத்தி விட்டான். பிறகுதான் தெரிந்தது  ஆக்சிலேட்டர்  குடு என்பதைத்தான் ரெட்டி அப்படி   சொல்லி இருக்காருன்னு.

 அதுலேருந்து  கொஞ்சம் பயத்துடனே நம்மாளு ரவுண்டானாவுல  வண்டி ஓட்டி  கொண்டு இருக்க, இதை கவனித்த ரெட்டி, ஒருநாள்  சாயந்திரம் ஒரு டீயையும் ரெண்டு ரொட்டியையும் வாங்கி கொண்டு வண்டியில் ஏறி,  ரொட்டியை டீயில்  நனைத்து சாப்பிட்டவாறே, நண்பனை உற்சாகப்படுத்துவதாக நினைத்து கொண்டு,  நான் இருக்கிறேன் அல்லவா பயப்படாதே நல்ல தைரியமா ஒட்டு என்று சொல்லி கொண்டு  இருக்க,  

நம்மாளு ஒரு ரவுண்டானாவில் வேகமா போவோம்னு நினைச்சு ஆக்சிலேட்டரை  ஒரு அழுத்து  அழுத்த , ரொட்டி தின்கிற சுவாரஸ்யத்துல ரெட்டியும்  கவனிக்காமல் விட, அடுத்த செகண்ட் வண்டி முன்னால  இருந்த "கர்பு ஸ்டோனை" எல்லாம் தாண்டி ரவுண்டானா நடுவில போய்  நின்னிருக்கு. கலக்கத்தோட நம்மாளு ரெட்டிய பார்க்க, ரொட்டி சிதறி,  டீயும் மூஞ்சு, ஒடம்பு   பூரா ஊத்தி இருக்க ,  ரெட்டி கண்ணாடிய பார்த்து அவரையே திட்டிக்க ஆரம்பிச்சாராம்.

பார்க் பண்ணியதும், யு டேர்ன் போட்டதும்....

ஆனா மானஸ்தங்க அந்த ரெட்டி!! அதுக்கு அப்புறம் எந்த ஒரு நெலமையிலையும், எங்களோட  போனை எடுக்கவே இல்லையே, எங்களோட பேர எவனாவது சொன்னா பயிற்சி கட்டணம் அதிகமா வசூலிக்கிறதா கேள்வி அவ்வ்வ்வவ் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Saturday, October 20, 2012

நண்பனும் தங்கையும் !!!

                                                             பாசமலர் படத்தை பார்த்து கெட்டு  போன பயபுள்ளைகள்ள  நம்ம நண்பனும் ஒருத்தன் . சின்ன புள்ளையில  தங்கச்சிக்கு ஒண்ணுன்னா மொத ஆளா நிப்பான். ஏதாவது தப்பு செய்ததற்கு   தங்கச்சியை அடிக்க அவங்க அம்மா கம்பை எடுத்தா , தங்கச்சி அழுவுதோ இல்லையோ  நம்மாளு அழ ஆரம்பிச்சுடுவான். 

அம்மா வேண்டாம்மா,  அம்மா வேண்டாம்மா  ன்னு சொல்லி  அவங்க அம்மா கைய புடிச்சு தொங்கி கிட்டு இருப்பான். பொறுத்து பொறுத்து பார்த்த அவங்க அம்மா, அவன் தங்கச்சி ஏதாவது தப்பு பண்ணினா மொதல்ல இவனை புடிச்சு வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அவனோட அறிவுக்கும், பண்ற சேட்டைக்கும்  வாரத்துக்கு ஏழு நாள் மட்டும் தான் அடிவாங்குவான். இப்போ பாசமலர் தங்கச்சியோட அடி கணக்கு வேறயா !! அதுனால கணக்கு வழக்கில்லாமல் அடிவிழும். போதும் போதுங்கிற அளவுக்கு அடி குடுத்து,  கடைசியா ஏதாவது தின்பண்டத்தை குடுத்து  விட்டுருவாங்க!!!.எந்த நேரமும் அழுகையும், தீனியுமாதான்  அலைவான் நம்ம பங்காளி.

ஒருநாள்   உலையில அரிசியை போட்டுட்டு,  தங்கையிடம் கொஞ்ச நேரம் கழித்து பக்கத்துக்கு வீட்டு அத்தையை கூப்பிட்டு சோறு வடிக்க சொல்லிவிட்டு  அவங்க அம்மா  ஒரு  கேதத்துக்கு போய்விட, விளையாட்டு மும்முரத்தில் தங்கையும் மறந்து விட, சோறு பொங்கலாயிருச்சு. அதுவும் அவங்க அம்மா வந்து பார்த்தா பின்னாடிதான்  தெரிஞ்சது .

கடுப்பான அவங்கம்மா கம்பை எடுத்து ப்ரோட்டோ கால் படி நம்ம பங்காளியை அடிக்காமல் நேரடியாக  அவன் தங்கச்சியை  அடி வெளுக்க ஆரம்பிக்க,
நம்மாளு தங்கச்சியை காப்பற்ற வேண்டுமென்ற கடமை உணர்வோடு  கம்பை அவங்க  அம்மாவிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓட, என்றுமில்லாத கோபத்தில் அவங்க அம்மாவும் விரட்ட, சிக்கினா சின்னாபின்னமாயிருவோம்னு  தெரிஞ்சு  நம்மாளு ஓடி வீட்டு கூரை    மேல ஏறிட்டான் . வேகமா வந்த அவங்க அம்மா கால் தடுக்கி விழுந்து கல் ஒரல்ல மோதி மண்டை ஒடஞ்சு ரத்தம் ஊத்துது. 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தவர்கள் , இவனை திட்ட  இதை எதிர்பார்க்காத நம்மாளு, டென்ஷனாகி  அழுதுகிட்டே இதுக்கெல்லாம் காரணம் இவதான்னு சொல்லிட்டு ஒரு ஓட்டை எடுத்து அவன் தங்கச்சி தலையில போட  அவ மண்டையும் ஒடஞ்சு ரத்தம் ஓட ஆரம்பிச்சது.

அப்புறம் என்ன அவன் ஓட ஆரம்பிச்சுட்டான்.   ஊரே ஒன்னு  கூடி அவனோட வீர தீர பிரதாபங்களை பேச அவங்க அப்பா அடுத்த வாரத்துல அவனை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டாங்க.  நம்மளுக்கு ஸ்நாக்ஸ் வரத்து கம்மியாயிருச்சு ஹி ஹி ஹி ..... !!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!







Thursday, September 20, 2012

இலை கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியும் !!!

                                                                    விநாயகர் சதுர்த்தி  அதுவுமா பேஸ்புக்குல  நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு   கொழுக்கட்டை போஸ்ட்டுல  "நச்" கமெண்டுகளா    போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த   நம்மளுக்கும்  கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர,  "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன்  டி.வி எபெக்டோட,   விநாயகர் சதுர்த்தியை  இலைகொழுக்கட்டையோட கொண்டாட  முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி  நேரமா அம்மாகிட்ட   விலாவரியா போன்ல  கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம்  சொல்லிட்டு,  சாயந்திரம்  வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு?  நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல".  பூசர  இலைக்காக  துபாய் பூரா  தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை  வாங்கியாச்சு.

அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு,    பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும்  மனசு  விடாம  தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க  பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச  நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற  கொஞ்சம்  கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா  மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை   ச்சே.. அந்த பூர்ணத்தை  நல்லா  கிண்ட ஆரம்பிச்சேன்.

 இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா  கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும்  போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு.  இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு  (உண்மையிலே நல்லா  தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச   எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு .   ஆரம்பம் முதல் நான்  பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா  மச்சான்,  
 

என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.

வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!







Monday, September 10, 2012

சினிமாவும் சிக்கித்தவித்த நானும் !!!

                                             சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட்  எடுத்து தூங்கினது  கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம்  தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல  ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ).  இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
 ஒருநாள்   சாயந்திரம்  நான் கராத்தே கிளாசுக்கு  வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால  கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா  இல்லையானு  பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப  என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா  என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த  என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க  ஷாக்காகி,
 ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு  நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு   எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும்   சொல்லிட்டு  போனாங்க. கரெக்ட்டா  6.30 மணிக்கு அவசர அவசரமா  நோட்ஸ் ஆப் லெசனான்னு??  நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம்  அடிச்சுக்கிட்டே இருந்ததால  கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .

 லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு  பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத  நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம  ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே  ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு  ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட்  எடுக்க போற நேரத்துல உள்ள போய்  சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை  வேற  போட்டுட்டு, படத்தையும்  தூங்காம பார்த்துட்டேன் .

ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி  ஸ்லோமோஷன்ல கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா  வந்துகிட்டு இருந்த  கராத்தே  மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம்  என்ன?  அடுத்த கிளாசுல  நாந்தான்   அவருக்கு  "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு  நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான்  இன்னொருத்தர்  மேல நல்லா  மோத  என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு  மூக்குலேருந்து  ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி  தக்காளி சட்னிதானே விடுன்னு   தொடச்சிக்கிட்டு வீடு போய்  சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)

ம்ம்ம்.....  சொல்ல மறந்துட்டேனே, சாகசமெல்லாம் பண்ணி, பஞ்செல்லாம் வாங்கி   அப்படி   நான் பார்த்த படம் நம்ம இளைய திலகம் பிரபு நடிச்சது , படத்தோட பேரு அதாங்க அதான், நான்  அந்த க்ரௌண்டுக்கு  கொடுத்தது,  








   "ரத்த தானம் ".


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!






Tuesday, September 4, 2012

வெங்காயமும் கண்ணீரும் !!!

                                                               நாளெல்லாம்    உழைச்சு களைச்சு  ரூமுக்கு போனா  அங்க வந்து தக்காளிய வெட்டு , வெங்காயத்த வெட்டு ,பொடலங்காய வெட்டுன்னு ஒரே இம்சைங்க ,  அதுலயும் அந்த  வெங்காயம் வெட்டும்போது  வரும் பாருங்க  கண்ணீர் ஸ்ஸ் ப்பா ... உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்தால  இவ்வளவு கண்ணீர் வருதேன்னு காரணம்  என்னன்னு ஒரு கதையை  நண்பர்கள்கிட்ட சொன்னேன் பாருங்க,  அதுலேர்ந்து அவங்க என்னைய கிச்சன் பக்கமே வரவேண்டாம் அப்படின்னு கெஞ்சி கேட்டுகிட்டாங்க. யாருக்காகவும் திரும்ப சொல்லாத அந்த கதை உங்களுக்காக கீழே !!!

ஒரு காலத்துல  தக்காளி , வெங்காயம் ,உப்பு  மூணும் நண்பர்களா  இருந்தாங்களாம்.   ஒருநாள் மூணு பேருமா நடந்து   போகும் போது  தாறுமாறா வந்த தண்ணி லாரியில அடிபட்டு "தக்காளி" செத்து போச்சு. நண்பன் செத்துபோயிட்டான்னு ரொம்ப உருகி உருகி அழுதாங்களாம் நம்ம வெங்காயமும், உப்பும் .    அந்த சோகத்தோட கடற்கரைக்கு போனவங்க சும்மா இருக்காம  அலையில கால் நெனைக்க ஆசைப்பட , வெங்காயம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம  உப்பு தண்ணியில போய்  நிக்க அதுவும் கரைஞ்சு செத்து போச்சாம் !!!

ரெண்டு நண்பர்களையும்  ஒரே நேரத்துல பறிகொடுத்த  துக்கத்துல வெங்காயம் "ஓ " ன்னு அழுதுகிட்டே இருக்க,  நம்ம கடவுள் தான் ரொம்ப இரக்க மனசுக்காரர்   ஆச்சே, வெங்காயத்துகிட்ட பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்னு கேட்க , வெங்காயம் சொல்லுச்சாம்   என் பிரெண்டு தக்காளி செத்தப்ப   நானும் , உப்பும் அழுதோம். அதே உப்பு கரைஞ்சு செத்தப்ப நான் மட்டும் தனியா அழுதேன். இனிமே நான் செத்தா  எனக்காக யார் அழுவான்னு  கண்ணீரோட கேட்க, செண்டிமெண்டா அட்டாக் ஆன கடவுள் சொன்னாராம்
கொய்யால இனிமே எவன் உன்னை சாவடிச்சாலும்   அவனும் அவன்கூட உள்ள எல்லாரும்  கண்ணீர் விட்டு  கதறுவாங்கன்னு  சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

மக்களே இப்ப தெரியுதா வெங்காயம் வெட்டுனா  கண்ணீர் வரக் காரணம் !!!
(நோ ஆட்டோ............... நோ பேட் வோர்ட்ஸ்!!!!!!!!!)


வெங்காயம் பற்றிய சில தகவல்கள் 
  • வெங்காயம் வெட்டும் போது கண் எரிவதற்கு காரணமான வேதிப்பொருள் ப்ரோப்பேன்தியல் எஸ் ஆக்ஸைடு . (அமினோ ஆசிட் சல்பாக்சைடு மற்றும் தண்ணீரின் கலவையால் வருவது ) 

  • வெங்காய உற்பத்தியில் சீனாதான் முதலிடம்.

  • பழங்கால பண்டமாற்றத்தில்  மிகவும் மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டது (இதுனால ஆட்சியே கவுந்திருக்கு நம்ம நாட்டுல!!!!!!)

  • கல்யாணம் செய்யபோற பிரம்மச்சாரிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுறது ரொம்ப நல்லதாம். (சொன்னதுலேருந்து ரூம்ல ரெண்டுபேர் வெறும் சின்ன வெங்காயமாதான் சாப்பிடுறாங்க)

  • வெங்காயம் வெட்டுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி ப்ரீசர்ல வச்சு எடுத்தா, இல்ல ஏதாவது சூவிங்கம் மென்னுகிட்டே வெட்டினால், இல்ல வெங்காய  அடிப்பாகத்த கடைசியா வெட்டுனாலோ  கண்ணு அதிகமா எரியாதாம். 
 
இதையும் மீறி கண்ணு எரிஞ்சா   இத ட்ரை பண்ணுங்க !!!!!!! 



படிச்சுட்டு,பார்த்துட்டு  திட்டணும்னு தோணுச்சுன்னா  என்னை  "போடா வெங்காயம்ன்னு  " திட்டுங்க ....அவ்வ்வ்வவ் !!!!!!!!!!!!!!!!!!!!!



வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!












Thursday, July 26, 2012

கணிணியால் காய்ந்தவன்...


கணக்குக்கும் நம்மளுக்கும் உள்ள சம்மந்தம் உலகம் அறிந்ததுதான். அதே மாதிரி நான் படுத்தி எடுத்த இன்னொரு விஷயம்தான் கணிணி. பத்தாவது பொதுத்தேர்வு எல்லாரையும் போல மாநிலத்துலேயே முதலாவதா  வருவேன்னு நெனைச்சு எழுதிட்டு வீட்ல டாப் அடிச்சுகிட்டு இருந்தப்போ, கணிணி வகுப்புல வழக்கம் போல நம்மள கேட்க்காம சேர்த்து விட்டாங்க…..

“சனிப்பொணம் தனியா போகாதுங்கற மாதிரி” நான் என்னோட நண்பனையும் சேர்த்துகிட்டு போனேன். ரெண்டு பேரும் சேர்ந்து கடமைக்கு போறது வர்றதுன்னு இருந்தோம். அப்போதான் ஒரு செமையான டெல்லி ஃபிகர்  ஒன்னு வந்து சேர்ந்துச்சு, அது எதோ விடுமுறைக்கு வந்த இடத்துல பொழுது போகாம அங்க வந்துச்சு, அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் ரொம்ப சின்சியரா கடமையே கண்ணும் கருத்துமா இருந்தோம். ஆனா எங்கள விட ஒருத்தர் ரொம்ப சின்சியரா இருந்தார், அவர்தான் எங்க இன்ஸ்ட்ரக்டர். அடடா... அடடா அவரு பண்ற பந்தா இருக்கே ஸ்ஸ்....அப்பா தாங்கல!!  இன்டர்நெட் சம்மந்தமா கிளாஸ் எடுக்கும் (அப்போ யாஹூ பிரபலமாகாத காலம்) போது அவரு www. யோகா .காம்,  அப்படின்னு வெப்சைட் இருக்குன்னு அப்டின்னு அடிக்கடி சொல்லுவார் ரெண்டு கூமுட்டை (நாங்கதான்) அதையும் ஆ ன்னு கேட்டுகிட்டு இருக்கும் . ரொம்ப உலக நடப்பு தெரிஞ்ச மாதிரி அவரு சீன் போட்டு இந்த மாதிரி சொல்லும்  போது பொறுத்து  பொறுத்து பார்த்த நம்ம டெல்லி ஃபிகர் பொங்கி எழுந்து சார் அது யோகா.காம்  இல்ல அது யாஹூ.காம்  சொல்லி பல்பு குடுத்துச்சு பாருங்க, நாங்களும் சத்தமா சிரிக்க , நம்மாளு மூஞ்சி இஞ்சி தின்ன எதுவோ மாதிரி ஆயிடுச்சி...


எங்களுக்கு வகுப்பு முடிஞ்சு போகும் போது, பல்பு வாங்கின நம்மாளு   என்ன நினைச்சாரோ தெரியல , கணிணியை ஷட்டவுன் பண்ணிட்டு போங்கன்னு சொல்ல, என்னடா பக்கத்துல இருக்கு ஸ்விட்ச் அத அமுக்குறத விட்டுட்டு போற நம்மள பண்ண சொல்றாரே அப்படின்னு நினைச்சுகிட்டு ரொம்ப வேகமா போய்   கணிணியில் இருந்த பவர் பட்டனை வேகமா அமுக்கி ஆப் பண்ணிட்டு வந்துட்டேன், அப்போ அந்த டெல்லிக்காரி என்னைய கேவலமா பார்த்தாளே ஒரு பார்வை, சரி சரி அடிப்படையிலேயே  ஒரு தப்பு நடந்துருச்சு போல விடுடா கைப்புள்ள அப்படின்னு நெனைச்சுக்கிட்டு வெளியில்  வந்துட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு இருந்த வகுப்பு, கணினியை  ஷட்டவுன் செய்வது எப்படி? 

இப்படிதான் இருந்தது  நம்ம அடிப்படை அறிவு.... சரி கல்லூரியில்தான் நமக்கு கட்டுமான பொறியியல் பிரிவு ஆச்சே ஒன்னும் தொந்தரவு இருக்காதுன்னு பார்த்தா  அங்கேயும் இந்த தொல்லை வந்தது.. வகுப்புலதான் நாமதான் பயங்கர கடமை உணர்ச்சியோட தூங்கியோ  இல்ல விளையாடியோ பொழுத போக்கிட்டோம். தேர்வு நேரத்துல  கணிணி ஆய்வகத்துல  பிரச்சினை ஆயிடுச்சி, எல்லாரும் ப்ரோகிராம எழுதி கண்காணிப்பாளர்கிட்ட காமிச்சுட்டு ஆய்வகத்துல போயி அதையோ ஒட்டி காமிக்கணும். நாம பைக் ஓட்டலாம், இல்ல கார் ஓட்டலாம், இல்ல ரொம்ப முயற்சி எடுத்து எதாவது பிகர ஓட்டலாம். ஆய்வகத்துல நம்ம என்னத்த ஓட்ட ?   நாமதான் கணிணியில புலியாச்சே!! நானும் என்னையே நம்பி இருக்குற கூட்டமும்(!!!!!) உட்கார்ந்தே இருந்தோம். தேர்வு அறை  கிட்டத்தட்ட காலியாகுற  நிலை வந்துடுச்சு,

நானும் புதுசு புதுசா என்னென்னவோ ப்ரோகிராம் எழுதுறேன், கண்காணிப்பாளர் அசராம  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு திருத்தம் சொல்லி திருப்பி அனுப்பிக்கிட்டே இருந்தாரு. "தன்  முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன்" போல  நானும் விடாமல் திரும்ப திரும்ப போய்கிட்டே இருந்தேன். கண்காணிப்பாளர் மாத்தாதது என் தேர்வு எண்  மட்டும்தான்கிற நிலைமையில,   நான் ரொம்ப களைப்பாகி கடைசியா எல்லா திருத்தமும் செஞ்சு கொண்டு போனேன், கண்காணிப்பாளர் திரும்பவும் ஒரு திருத்தம் சொன்னார், நான் அதுக்கு சொன்ன பதிலுக்கு ரொம்ப சாதுவான அவர் கொடூர கோபம் கொண்டு தேர்வுத்தாளை தூக்கி வீசிட்டு, திட்டிகிட்டே  அடிக்க அடிக்க வந்தாரு, நான் ரொம்ப பவ்யமா தேர்வுத்தாளை எடுத்துக்கிட்டு  என்னோட இடத்துல உட்கார்ந்தவுடனே என் நண்பன் கேட்டான் அவரு கோபப்படுற அளவுக்கு அப்படி என்னடா சொன்ன? அவர்கிட்ட  நான்  சொன்னது என்னன்னா,
                    *
                    *
                    *

                    *
                    *
                    *
                    *
                    *
                    *
 அந்த திருத்தத்தையும் நீங்களே எழுதிடுங்க சார்....!!!!!!!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, June 14, 2012

நாலு பேருக்கு நன்றி



எல்லாரையும் போலவே நடப்பு அரசியலை வெறுத்த போதுதான் தமிழகத்தின் விடிவெள்ளியாக, விடிசனியாக….. அவர் அவதரித்தார். சரிதான் நல்லதொரு மாற்றம், இனிமே எல்லாம் ம்ம்ம் ….. நல்லதே நடக்கும் என்றிருந்த போது நம்ம நண்பன் ஒருவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த கட்சியில சேர்ந்து ஒரு பொறுப்புல வந்துட்டான்.

அதுக்கு அப்புறம் அந்த நாசமா போன ப்ளஃக்ஸ் கலாச்சாரத்துலயும் சேர்ந்து ஊரையும், தமிழையும் கதிகலங்க வச்சிகிட்டு இருந்தான்.       
                                         

இவன் இருந்த வேகத்த பார்த்துட்டு கட்சியில உள்ளாட்சி தேர்தல்ல இவனுக்கும், இவனோட இன்னொரு நண்பனுக்கும் சீட் குடுத்தாங்க…. இவரு நல்லவரு… அவரு நல்லவரோ நல்லவர்.

ரொம்ப ஆர்வமா எல்லாரும் உழைச்சாங்க… நம்ம நண்பனை எதிர்த்து நின்னவரு ஒரு பெரிய கட்சிய சேர்ந்தவர்,பண முதலை, இருந்தாலும் போட்டு பார்ப்போம் அப்படின்னுதான் தேர்தல்ல நின்னான்.  தேர்தலும் முடிஞ்சு முடிவுகளும் வந்துச்சு, கவுண்டிங் முடிஞ்சு கொஞ்சம் சோகமா வந்தவனைப் பார்த்து என்னாச்சுடா என்றதற்க்கு 4 விரலைக் காட்டினான். பயபுள்ள 4 ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டான்.எங்க எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமாயிருச்சி.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, அந்த இன்னொரு நண்பனுக்கு என்ன ஆச்சுடா என்றதற்க்கு  அதுக்கும் 4 விரல்லயே காட்டினான். என்ன அவனும் 4  ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டானா !!!! என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு, கேட்டவனை ஏறிட்டு பார்த்துட்டு நண்பன் அமைதியா சொன்னான்………

இல்லடா மச்சான், அவன் வாங்கினதே 4 ஓட்டுதான் !!!!!!!!!!!!!!!!!!!!
(ஏன்னா அவருக்கு அவ்வளோ நல்ல பேரு!!)

இதுல ஹைலைட்டான விஷயமே, கடுப்பான நண்பன் முடிவு வந்த மறுநாள், நன்றி சொல்றேன்னு சொல்லிட்டு, மைக் செட்டும் ஒரு ஆட்டோவும், வாடகைக்கு எடுத்துட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் திருப்பி திருப்பி போட்டு அந்த ஏரியாக்காரங்கள வெறுப்பேற்றினான். அது என்ன பாட்டுன்னா…..
                                                      
  “ நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள்குடுத்து தூக்கி செல்லும்
   அந்த நாலு பேருக்கு நன்றி..”


வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………