Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


8 comments:

  1. அழகிய கலிதை...

    திரும்ப வரும் அனைத்தும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பரே...

      Delete
  2. ##மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
    இலவச இணைப்பாய் உறுத்தும்
    செய்திலா வினைகளின் மிச்சங்களும்
    அதன் நினைவுச் சேர்க்கைகளும் ##
    அருமையான வரிகள்...
    உள்ளத்தின் இன்னொரு வலியினை உண்ர்த்துவதாக

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி சகோ.

      Delete
  3. மனம் தொட்ட அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி..

      Delete
  4. அத்தனை எண்ண‌ங்களையும், ஒருங்கே பிரதிபலிக்கும் பாவனையில், அழகுக்கு அழகு சேர்க்கும் சுழ்நிலையில் அமர்திருக்கும் நாயகனின் போசே...சொல்லாமலே சொல்லும் அத்தனையும்.பொன்

    ReplyDelete
    Replies
    1. படம் கூகிள் உபயம்.. வருகைக்கும் மறுமொழிட்டமைக்கும் நன்றி நண்பரே,,,

      Delete