Thursday, August 9, 2012

மழலைகள் ....




எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.

எப்படி  கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில்  நனைந்திட,

கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.

எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,

வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான  உனது தருணங்கள் !!!!!!!















2 comments:

  1. இயலவிலா//
    -இயலாக் -பொருத்தமா?
    மழலைகளெல்லா!!!
    அழகாக வந்துள்ளது.

    ReplyDelete
  2. இயலவிலா// என்பது பொருத்தமானதாக எனக்கு தோன்றுகிறது நண்பரே.. பொருட்பிழை ஏதும் இல்லையல்லவா? இருப்பின் கூறவும் திருத்திகொள்கிறேன் நண்பரே..

    தங்களின் பின்னூட்டம் உற்சாகமளிக்கிறது. நன்றி நண்பரே. தொடர்க....

    ReplyDelete