Tuesday, September 4, 2012

வெங்காயமும் கண்ணீரும் !!!

                                                               நாளெல்லாம்    உழைச்சு களைச்சு  ரூமுக்கு போனா  அங்க வந்து தக்காளிய வெட்டு , வெங்காயத்த வெட்டு ,பொடலங்காய வெட்டுன்னு ஒரே இம்சைங்க ,  அதுலயும் அந்த  வெங்காயம் வெட்டும்போது  வரும் பாருங்க  கண்ணீர் ஸ்ஸ் ப்பா ... உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்தால  இவ்வளவு கண்ணீர் வருதேன்னு காரணம்  என்னன்னு ஒரு கதையை  நண்பர்கள்கிட்ட சொன்னேன் பாருங்க,  அதுலேர்ந்து அவங்க என்னைய கிச்சன் பக்கமே வரவேண்டாம் அப்படின்னு கெஞ்சி கேட்டுகிட்டாங்க. யாருக்காகவும் திரும்ப சொல்லாத அந்த கதை உங்களுக்காக கீழே !!!

ஒரு காலத்துல  தக்காளி , வெங்காயம் ,உப்பு  மூணும் நண்பர்களா  இருந்தாங்களாம்.   ஒருநாள் மூணு பேருமா நடந்து   போகும் போது  தாறுமாறா வந்த தண்ணி லாரியில அடிபட்டு "தக்காளி" செத்து போச்சு. நண்பன் செத்துபோயிட்டான்னு ரொம்ப உருகி உருகி அழுதாங்களாம் நம்ம வெங்காயமும், உப்பும் .    அந்த சோகத்தோட கடற்கரைக்கு போனவங்க சும்மா இருக்காம  அலையில கால் நெனைக்க ஆசைப்பட , வெங்காயம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம  உப்பு தண்ணியில போய்  நிக்க அதுவும் கரைஞ்சு செத்து போச்சாம் !!!

ரெண்டு நண்பர்களையும்  ஒரே நேரத்துல பறிகொடுத்த  துக்கத்துல வெங்காயம் "ஓ " ன்னு அழுதுகிட்டே இருக்க,  நம்ம கடவுள் தான் ரொம்ப இரக்க மனசுக்காரர்   ஆச்சே, வெங்காயத்துகிட்ட பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்னு கேட்க , வெங்காயம் சொல்லுச்சாம்   என் பிரெண்டு தக்காளி செத்தப்ப   நானும் , உப்பும் அழுதோம். அதே உப்பு கரைஞ்சு செத்தப்ப நான் மட்டும் தனியா அழுதேன். இனிமே நான் செத்தா  எனக்காக யார் அழுவான்னு  கண்ணீரோட கேட்க, செண்டிமெண்டா அட்டாக் ஆன கடவுள் சொன்னாராம்
கொய்யால இனிமே எவன் உன்னை சாவடிச்சாலும்   அவனும் அவன்கூட உள்ள எல்லாரும்  கண்ணீர் விட்டு  கதறுவாங்கன்னு  சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

மக்களே இப்ப தெரியுதா வெங்காயம் வெட்டுனா  கண்ணீர் வரக் காரணம் !!!
(நோ ஆட்டோ............... நோ பேட் வோர்ட்ஸ்!!!!!!!!!)


வெங்காயம் பற்றிய சில தகவல்கள் 
  • வெங்காயம் வெட்டும் போது கண் எரிவதற்கு காரணமான வேதிப்பொருள் ப்ரோப்பேன்தியல் எஸ் ஆக்ஸைடு . (அமினோ ஆசிட் சல்பாக்சைடு மற்றும் தண்ணீரின் கலவையால் வருவது ) 

  • வெங்காய உற்பத்தியில் சீனாதான் முதலிடம்.

  • பழங்கால பண்டமாற்றத்தில்  மிகவும் மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டது (இதுனால ஆட்சியே கவுந்திருக்கு நம்ம நாட்டுல!!!!!!)

  • கல்யாணம் செய்யபோற பிரம்மச்சாரிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுறது ரொம்ப நல்லதாம். (சொன்னதுலேருந்து ரூம்ல ரெண்டுபேர் வெறும் சின்ன வெங்காயமாதான் சாப்பிடுறாங்க)

  • வெங்காயம் வெட்டுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி ப்ரீசர்ல வச்சு எடுத்தா, இல்ல ஏதாவது சூவிங்கம் மென்னுகிட்டே வெட்டினால், இல்ல வெங்காய  அடிப்பாகத்த கடைசியா வெட்டுனாலோ  கண்ணு அதிகமா எரியாதாம். 
 
இதையும் மீறி கண்ணு எரிஞ்சா   இத ட்ரை பண்ணுங்க !!!!!!! 



படிச்சுட்டு,பார்த்துட்டு  திட்டணும்னு தோணுச்சுன்னா  என்னை  "போடா வெங்காயம்ன்னு  " திட்டுங்க ....அவ்வ்வ்வவ் !!!!!!!!!!!!!!!!!!!!!



வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!












6 comments:

  1. nice machchan super

    ReplyDelete
  2. அசத்திட்டீங்க நண்பா

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... தொடரட்டும் தங்கள் வருகை.

      Delete
  3. Replies
    1. நான் வெங்காயம் வெட்டி கஷ்டப்பட்டது உங்களுக்கு காமெடியா இருக்கா :-) ???!!!! வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete