Saturday, August 4, 2012

கொண்டவனின் கோபம் ...

 
கோபத்தில் கொந்தளிக்கிறது உன்  தேகம்
வார்த்தைகளால் காயப்படுத்த
துடித்து கொண்டே இருக்கிறது உன் குரூர மனம்  
உன் உதட்டு சூட்டின் வெப்பம் தாளாமல் 
ஒளிந்து கொள்கிறது ஆறாவது அறிவு
கொல்லும் குரூரம் வார்த்தைகளில்
தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாமல்
 நிராயுதபாணியாய் நான்,
 விஷமாய் இருக்கும் உடலில் இருந்து 
வரும் வார்த்தைகளில்  மட்டும்
அமிர்தமா சொட்டப்போகிறது ???
வார்த்தை கத்திகளில்  விஷம் தோய்த்து
லாவகமாக   வீசத்தெரிந்த உனக்குத்
தெரியவில்லை இப்போதெல்லாம் 
நீ காயப்படுத்துவது என்  உடலைத்தான்
உணர்வுகளை அல்ல என்று  
ஏனென்றால்
அவைதான் மரணித்து மாதங்களாகி விட்டதே.!!!







4 comments: