Saturday, February 4, 2012

மச்சான் உனக்கு எத்தனை?



எங்க கல்லூரி நாட்கள்ல செமஸ்டர் ரிசல்ட் வந்த ஒரு  வாரத்துக்கு  இந்த வாசகம் ரொம்பவும் பிரசித்தி பெற்றது. பொதுவா இதுக்கு அர்த்தம் உனக்கு எத்தனை அரியர் இருக்குன்னு ஆனா எங்கள பார்த்து இத கேட்டா நாம எத்தன பேப்பர் பாஸ் பண்ணி இருக்கோம்னு அர்த்தம் அந்த அளவுக்கு சரஸ்வதி தேவியோட  கருணை  இருந்துச்சு ..

கல்லூரியோட தரத்த உயர்த்த நிர்வாகம் ரொம்ப முயற்சி  பண்ணாங்க, அதுல ஒண்ணுதான்  மாடல் எக்ஸாம் வைக்கிறது. எக்ஸாம் வச்சா மட்டும் போதுமா அத எழுத ஆள் வேண்டாமா ? ஒரு பய எக்ஸாம் எழுத வர்றது இல்ல . நீங்க ஒன்னும் எழுதி கிழிக்க வேண்டாம் நீங்க வந்தா மட்டும் போதும் அப்படிங்கற அளவுக்கு நிர்வாகம் வந்துருச்சி .. அதுனால நம்மளோட பங்களிப்ப செய்வோம்னு நம்மளும் லேட்டா  போயிட்டு  சீக்கிரம் வந்திடுறது ....இத பார்த்த ஒரு ப்ரொபசர் இனிமே லேட்டா வந்த உள்ள விட மாட்டேன்னு சொல்ல நாங்களும் வழக்கம் போல தலைய ஆட்டிட்டு உள்ள வந்தாச்சு ..கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் என் நண்பன் ஒருவன்.   ப்ரொபசர் அவன்கிட்ட வந்து ஏன் ஒன்னும் எழுதாம இருக்கேன்னு கேட்க, அவன் ரொம்ப அமைதியா தவறுதலா நாளைக்கு  உள்ள எக்சாமுக்கு மாத்தி படிச்சிட்டேன்னு  சொல்ல ப்ரொபசர் கடுப்பாகி ஒன்னும் சொல்ல முடியாம போயிட்டாரு ...
    
அடுத்த நாள் வழக்கம் போல நாங்க லேட்டா வர,  ப்ரொபசர் ரொம்ப உணாச்சி வசப்பட்டு உங்கள உள்ளே விடமுடியதுன்னு சொல்ல, நாங்களும் சரி சார்   கிளம்புறோம் ஒருவேள போற வழியில பிரின்சிபால் பார்த்துட்டு  ஏதாவது கேட்டா,  நீங்க உள்ள விடலன்னு சொல்றோம்னு சொல்ல  அவரு ரொம்ப கடுப்பாகி ஒரு அஞ்சு நிமிஷம் கத்திட்டு உள்ள அனுமதிச்சாரு..ஏன்னா அவருக்கும் ப்ரின்சிபாலுக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு ...

உள்ள வந்த நாங்களும் கொஸ்டின் பேப்பர வாங்கிட்டு வழக்கம் போல சும்மா உட்காந்து இருந்தோம்.என் நண்பனும் சும்மா இருக்கிறத பார்த்த  ப்ரொபசர் வேகமா என் நண்பகிட்ட போயி , நீதான் நேத்தே இந்த பேப்பருக்கு படிச்சுட்டு வந்துட்டியே அப்புறம் ஏன் ஒன்னும் எழுதாம உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க அவன் ரொம்ப கூலா, "படிச்சது எல்லாம் மறந்து போச்சு சார்" அப்படின்னு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க ப்ரொபசர் நொந்தே போய்ட்டாரு. அப்புறம் என்ன எங்க வீட்டுல பண்ணினத அவரும் பண்ணிட்டு விட்டுட்டாரு . அதாங்க தண்ணி தெளிச்சு   விட்டுட்டாரு.               

செமஸ்டர் எல்லாம் ஒன் டே<காலையில ஒன்னு ,மதியம் ஒன்னு >     , டெஸ்ட் மேட்ச் <தொடர்ச்சியா அஞ்சு நாளைக்கு எக்சாம்>   ரேஞ்சுக்கு எழுதுறது.  இதே ரேஞ்சுக்கு எழுதுன  செமெஸ்டருக்கு  ரிசல்ட் வந்துச்சு ...எனக்கு ஒரு சென்டிமென்ட் என்னன்னா நம்மளோட ரிசல்ட்ட நாம மொதல்ல பார்க்கிறது இல்ல, நண்பர்கள் எல்லாம் பார்த்துட்டு சொன்னதுக்கு அப்புறமா மனச கொஞ்சம் திடப்படுத்திக்கிட்டு பார்க்கிறது . சில சமயம் அதிர்ச்சியா  ஆல் கிளியர் பண்றதும் உண்டு. அப்படி ரிசல்ட் வந்த நேரம்  நண்பர்கள் எல்லாரும் ரிசல்ட் பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க, நான் போய், மச்சான் உனக்கு எத்தனை  ?  மாப்ள உனக்கு எத்தனை? அப்படின்னு கேட்டுட்டு இருந்தேன், அதுல ஒருத்தன் மட்டும் ரொம்ப சோகமா இருந்தான், என்ன ஆச்சுடா மச்சான்னு நான் கேட்க, கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொன்னான்,


"கொய்யால மூணாவது முறையா பர்ஸ்ட் இயர்  வாஷ்  அவுட்டுடா மாப்ள " .

 வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் .     






   

Thursday, February 2, 2012

உன் வயசென்ன மச்சான்!!!

                                       எல்லோருக்கும் காலேஜ் லைப் ரொம்ப சுவாரஸ்யமா தான் இருக்கும்.  என்னுடன் கூட படித்த  நண்பர்களும்   என்கூடவே அதே காலேஜ்ல சேர்ந்ததால நம்மளுக்கு ரொம்பவே விசேஷம்.....முதல் வருடம் ஹாஸ்டல் வாழ்க்கை ரொம்ப அமர்க்களமாக இருந்தது.  ராகிங் தொல்லைக்காக   பர்ஸ்ட் இயருக்கு தனி ஹாஸ்டல், தனி மெஸ் , காலேஜ் போகும் போது   பாதுகாப்புக்கு  ரெண்டு மூணு  வார்டன் எல்லாம் உண்டு .... ஆனா சீனியர்ஸ் அதையும் தாண்டி   வந்து அடி பொளந்துட்டு போயிருவாங்க ......

லேப் ல  அவுட்புட் வரலன்னு யாராவது லேட்டா வந்தான்... தொலைஞ்சான் ..அங்க வராத   அவுட்புட் எல்லாம்  இங்க வந்திரும்......எல்லா பிரச்னையும் ரூமுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறந்து போயிரும் .. அவ்வளவு ஜாலியா இருக்கும் .... எங்களோட பொழுது போக்குல ஒன்னு  என்னன்னா ரூமுக்கு வர்ற பசங்ககிட்ட  பிறந்த தேதி கேட்டு கலாய்க்கிறது..எங்க ரூம்மேட்ட பார்க்க   வர்ற   பசங்கள எல்லாருக்கும்  அறிமுகப்படுத்தி வச்சிட்டு சபையில   விட்டுடுவான். கொஞ்ச நேரம் அவன்கிட்ட இயல்பா பேசிக்கிட்டு இருந்துட்டு   .. எங்கள்ள ஒருத்தன் வயசு என்ன மாப்ள அப்படிம்பான், நம்மாளும் பதினெட்டு , இல்ல பத்தொம்பது அப்படின்னு சொல்ல ..எல்லாரும் ரொம்ப ஷாக்காகி என்ன சொல்ற என்ன மாப்ள இப்படி சொல்ற என் வயசு எட்டு தான் ஆகுது, மாமா உனக்கு எத்தனைன்னு பிரெண்ட பார்த்து கேட்க அவங்களும் எட்டர, ஒன்பது இந்த ரேஞ்சுக்கு சொல்ல நம்மாளு  லைட்டா   டரியல் ஆவான் ....   

உடனே  நீ எந்த  வருஷம் பொறந்த .... அப்படின்னு  கேட்க நம்மாளும் அவன் பொறந்த வருஷத்த  எண்பது,எண்பத்தொன்னு ரேஞ்சுக்கு சொல்ல ..நாங்க ரொம்ப கேஷுவலா ஒ...  தொண்ணூறு , தொண்ணுத்தி ஒன்ன  தான் மாத்தி சொல்லிட்டியான்னு கேட்க அவன் கொஞ்சம் யோசனையா இல்லையே மாப்ள  நான் எண்பதுலதான்  பொறந்தேன்னு சொல்ல .. அப்படின்னா முதியோர் கல்விக்கு போக வேண்டியதுதான எதுக்கு இன்ஜினியரிங் காலேஜ் வந்த .. அப்படின்னு கேட்டு அவன ஊறுகாயா ஆக்கி நம்ம பொழுத போக்க  வேண்டியது ...
அப்படி     ஊறுகாயா ஆனவங்கள்ள  பல பேரு அவனோட ரூமுக்கு போயி மார்க் ஷீட்ட பார்த்து அவனோட சந்தேகத்த நிவர்த்தி பண்ணிருக்காங்கன்னா பாத்துக்கோங்க  ....

இதுல ஹைலைட்டு என்னான்னா எங்க ரூம்ல இருந்துகிட்டு  அவன் காரிடார்ல போற பசங்கள பார்த்து மச்சான் உன் வயசு என்னன்னு அவன் கேட்க அவங்களும்   எட்டர, ஒன்பது அப்படின்னு சொல்ல நம்மாளு முகத்துல  ஈயாடாது .....

அவங்க ஏன் அப்படி சொல்றாங்கன்னா ??? 
 ஒருகாலத்துல  அவங்களும்  நமக்கு ஊறுகாயா ஆனவங்கதான் !!!!!!!!!!!!!!!!!


      வாழ்க வளமுடன்...  தமிழ் தந்த புகழுடன் ...