Sunday, January 22, 2012

பொங்கலோ பொங்கல்.

      


இந்த ப்ளாக் ஆரம்பிச்சு எழுதணும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டே இருந்தேன். அதுக்கு இப்பதான் நேரம் அமைஞ்சு வந்துருக்கு. அப்படி என்ன ஆணி புடுங்குற வேலன்னு நீங்க நெனைக்கிறது புரியுது.
அப்பிடியே லூசுல விடுங்க .. மொத நாளே  தண்ணி குடிக்க வைக்காதீங்க...
சமீபத்துல பொங்கல் முடிஞ்சதால  நம்மளோட பொங்கல் அனுபவத்த போடலாம்னு நெனைக்கிறேன்...  



 

படிக்கிற காலத்துல <நாம எங்க படிச்சோம் > பள்ளிக்கூடம் போற வயசுல இந்த பண்டிகையை கொண்டாடுற சந்தோஷத்த விட அதுக்கு முன்னாடி பேசுற பேச்சுதான் ரொம்ப சந்தோஷம்.
அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது எல்லாம் நடராஜா சர்விஸ்தானே.. அதுனாலே பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் ...
பொங்கலுக்கு முன்னாடி தொடர்ச்சியா லீவா வர்றதால அசைன்மென்ட் , ஹோம் வொர்க்  எல்லாம்  ஈஸியா ஏமாத்திடலாம். 
பள்ளிகூடத்தில பாதி நாள் இப்படியேதான் போனிச்சு....
பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே பனை ஓலை வெட்டி காய வச்சு   மாட்டு பொங்கல் அன்னைக்கு சாயந்திரம்  வீட்டுக்கு முன்னாடி குழி பறித்து பொங்கல் வைச்சு யார் வீட்டு பானை முதல்ல பொங்குதுன்னு ஒரு பெரிய போட்டியே நடக்கும்.
போற எடத்துல எல்லாம் பொங்கலும் கரும்புமா ஒரே அமர்க்களமா இருக்கும்.
அதெல்லாம்  சின்ன வயசுல ...
 எப்போ வேலன்னு வெளிய வந்ததுலேர்ந்து  பொங்கல் கரும்பு எல்லாம் பேப்பர்ல பார்க்கிறதோட சரி........   இன்னும் சொல்லணும்னா முதன் முதலா  நான் துபாய்   வந்ததே போகி அன்னைக்குதான் ...  
பசங்க எல்லாரும் சொன்னாங்க   தமிழ்நாட்ட பிடிச்ச எதோ தொலஞ்சதுன்னு......    என்னத்த சொல்ல ...............
அதிலிருந்து ஒரு முறை கூட பொங்கலை நான் வீட்டில் கொண்டாடியதில்லை.....  

சரி இந்த முறையாவது நம்ம ரூம்ல பொங்கல் செய்வோம்னு பொங்கலன்னிக்கு    சாயந்திரம்  நம்மளோட குக் கிட்ட சொல்லிட்டு, நான் பசங்களோட கோயிலுக்கு போயிட்டேன். அங்கேருந்து கரும்பு , பூ எல்லாம் வாங்கிட்டு ரூமுக்கு வந்தேன் . உள்ள நுழைஞ்ச உடனே   பொங்கல் வாசன மூக்க தொலைக்கும்ன்னு பார்த்தா ஒரே தீஞ்ச வாசம்... நம்ம குக்  மட்டன் வெட்டுற கத்திய வெச்சு குத்து குத்துன்னு பொங்கல் வச்ச பாத்திரத்த குத்திக்கிட்டு இருக்காரு ....
நான் ரொம்ப ஜெர்க்காகி என்ன ஆச்சுன்னு  கேட்குறேன் மனுஷன் என்ன பார்க்காமலே " கொஞ்சம் தீஞ்சு போயிருச்சி" அப்படின்னாரு ....குத்துற
குத்த பார்த்தா கொஞ்சம் தீஞ்ச மாதிரி தெரியலயேன்னு டிரஸ் மாத்திட்டு கட்டில பார்த்தா, கட்டில கிடந்த  துணி எல்லாம் கசங்கி இருந்தது ....
லைட்டா சந்தேகம் வந்து கிச்சனுக்குள்ள போனா ஒரே சரக்கு வாட .....
அப்பறம் தான் புரிஞ்சது நம்மாளு பொங்கல அவரு  ரூம்ல கொண்டாடிட்டு, நம்ம ரூமை   பொங்க வச்சிட்டாருன்னு....அவரு நல்லா சரக்கு அடிச்சுட்டு,  நம்ம ரூம்ல  மட்டை ஆயிட்டாரு ,பொங்கல் வச்ச பாத்திரம் நல்லா தீஞ்சு, உருகுர நிலைமைக்கு வந்துருச்சு ...

பாத்திரத்துல பாதிக்கு மேல அடிபிடிச்சு கல்லு மாதிரி ஆயிருச்சு ...
நல்லவேள பக்கத்துக்கு ரூம் ஆள் வந்து ஸ்டவ்வ  ஆப் பண்ணி இவர தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுருக்கான்.அப்புறமா அந்த பாத்திரத்த  குப்பை தொட்டில  போட்டுட்டு கொஞ்சம் கரும்பு , பிரசாதம் அப்பறம் நிறைய திட்டும் வாங்கிட்டு போனாரு...

அப்பறம் என்ன பொங்கல் சாப்பிடலாம்ன்னு வந்துட்டு ரெண்டு பழத்த சாப்பிட்டு படுத்தோம்... படுக்கும் போது நண்பனிடம் கேட்டேன் ஏன்டா ஒருவேள ஸ்டவ் வெடிச்சுருந்தா ???????????       

என்ன ஒங்கிட்ட திட்டு வாங்க அவரு இருந்துருக்க மாட்டாரு !!!!!!!!!
    

                          பொங்கல் நல்வாழ்த்துகள்.